2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்கள்!

Date:

இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டு நிறைவைக்கொண்டாடும் வகையில் 2000 ரூபாய் நாணயத்தாளின் முக்கிய பாதுகாப்பு அம்சங்களை வெளியிட்டுள்ளது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த 2000 ரூபாய் நாணயத்தாள் பொதுமக்கள் அதன் நம்பகத்தன்மையை எளிதாக சரிபார்க்க உதவும் வகையில் பல பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த தாளை வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால், வாளினை கொண்ட சிங்கம் முழுமையாக தெளிவாக தெரியும்,மேலும் வெளிச்சத்திற்கு மேலே உயர்த்திப் பிடித்தால், நிறம் மாறும். பாதுகாப்பு நூல் நீல நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறி, கொழும்பில் உள்ள கடிகார கோபுரத்தினை காட்டுகின்றது.

மேலும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஆறு தொட்டுணரக்கூடிய பட்டைகள் உள்ளன. புற ஊதா ஒளியின் கீழ், ஆண்டு கருப்பொருளில் ஒளிரும் இரட்டை வண்ணங்கள் மற்றும் முன்வானலை தோன்றும், மதிப்பும் தெரியும்.

இதனால் உண்மையான ரூபாய் தாள்களை இயந்திரத்தினால் அடையாளம் காண முடியும், போலி ரூபாய் தாள்களை கண்டுபிடிக்கவும் இந்த அம்சங்களைப் பயன்படுத்துமாறு மத்திய வங்கி பொதுமக்களை வலியுறுத்துகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...