2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

Date:

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, 11.484 மில்லியன் மீற்றர் துணி நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவை அனைத்தும் சீன மக்கள் குடியரசின் முழுமையான நன்கொடையாக துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன.

இந்த சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெறும்.

சுமார் 4,418,404 மாணவர்கள் பாடசாலை சீருடைகளைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், ஜனவரி 19 ஆம் திகதி முதல் அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

6 நாட்களில் ஒரு பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட பேருந்து...

107 வயது வரை வாழ்ந்த மூதாட்டி ஹஸீனா உம்மா காலமானார்!

தென் மாகாணத்தின் பெலிகம, கடையவத்த பகுதியைச் சேர்ந்த ஹஸீனா உம்மா என்ற...

எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக மன்றம் ஆழ்ந்த இரங்கல்

பிரபல விருது பெற்ற எழுத்தாளர் தி. ஞானசேகரன் மறைவுக்கு தெல்தோட்டை ஊடக...

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் குர்ஆன் மத்ரஸாவின் 25ம் ஆண்டு நிறைவு விழா

தாருல் குர்ஆன் லிபரா இமில் ஈமான் மத்ரஸாவின் முகாமைத்துவ குழு அங்கத்தவர்கள்,...