2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

Date:

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, 11.484 மில்லியன் மீற்றர் துணி நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவை அனைத்தும் சீன மக்கள் குடியரசின் முழுமையான நன்கொடையாக துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன.

இந்த சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெறும்.

சுமார் 4,418,404 மாணவர்கள் பாடசாலை சீருடைகளைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், ஜனவரி 19 ஆம் திகதி முதல் அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக கிம் ஜாங் உன் மீண்டும் தேர்வு!

வடகொரியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அந்நாட்டின் தலைவர்...

இந்தியாவின் உயர்மட்ட ஆன்மீகத் தூதுக் குழுவினர் இலங்கை வருகை.

அயோத்தி சிவ ஆலயத்தின் தலைமை அர்ச்சகர் கைஷானந்த் கிரி மஹராஜ் (Kaishanand...

ரமழான் சிந்தனை: குர்ஆன் கூறும் ஞானம்: வாழ்வின் நோக்கம், ஈமானிய வாழ்வு மற்றும் பணிவு.

வாழ்க்கை என்பது ஒரு குறுகிய பயணம். அந்தப் பயணத்தை எவ்வாறு வடிவமைக்க...

புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி படுகொலை: 16 வயது சிறுவன் கைது!

புத்தளம் - அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் மிகக் கொடூரமாகக்...