2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் இம்மாதத்தில் வழங்கப்படும்

Date:

இந்த ஆண்டு ஜனவரி மாதம், நாட்டிலுள்ள அரசு மற்றும் உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசு அங்கீகாரம் பெற்ற பிரிவேனாக்களில் பயிலும் மாணவர்களுக்கும் இலவச பாடசாலை சீருடைகளை வழங்க கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இதற்கமைய, 11.484 மில்லியன் மீற்றர் துணி நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவை அனைத்தும் சீன மக்கள் குடியரசின் முழுமையான நன்கொடையாக துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளன.

இந்த சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் இடம்பெறும்.

சுமார் 4,418,404 மாணவர்கள் பாடசாலை சீருடைகளைப் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதுடன், ஜனவரி 19 ஆம் திகதி முதல் அந்தந்த கோட்ட அலுவலகங்களுக்கு சீருடைத் துணிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...