இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்!

Date:

இந்தியாவின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழகம் எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் (MJK) சார்பில் தேசியக் கொடி ஏற்றி, பல்வேறு நலத்திட்ட உதவிகளுடன் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அதற்கமைய இன்று காலை கட்சியின் தலைமையகத்தில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் முக்கிய அங்கமாக, “நேசம் வளர்ப்போம், தேசம் காப்போம்” என்ற உறுதிமொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வெறும் கொண்டாட்டமாக மட்டுமன்றி, சமூக நலனை முன்னிறுத்தி மஜக இந்த நாளைப் பயன்படுத்தியுள்ளது.

இதன்படி தமிழ்நாடு முழுவதும்  பல இடங்களில் மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன, இரத்ததான முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்குக் கல்வி உபகரணங்கள் விநியோகம், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு விநியோகம், நோயாளிக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்குதல் என பல்வேறு மனிதாபிமான உதவிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.முகமது நாசர், தலைமை ஒருங்கிணைப்பாளர் J.S.ரிஃபாயி, மாநிலச் செயலாளர் கலைக்குயில் இப்ராஹிம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

இந்தியாவின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், தமிழக அரசியல் களத்தில் ஒரு கட்சி இவ்வளவு விரிவான சமூகப் பணிகளை முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேற்று காலமான பேராசிரியர் அப்துல் மலிக் அவர்களின் ஜனாஸா இஸ்லாமாபாத்தில் நல்லடக்கம்.

இலங்கை மருதமுனையை பிறப்பிடமாகக் கொண்ட ஜாமியா நளீமியாவின் பட்டதாரியும், பாகிஸ்தான் சர்வதேச...

போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை வழங்கிய ஈரான்!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான்...

வில்பத்து வழக்கு: ரிஷாத் பதியூதீனின் மேல்முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

வில்பத்து சரணாலயத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதிகளை அழித்தது மற்றும் அதைத் தொடர்ந்த...

‘அமைதிக்கான நடைபயணம்’: நாளை கொழும்பில் சிறப்பு போக்குவரத்து திட்டம்

நாளை (28) கொழும்பில் நடைபெறவுள்ள ‘சமாதான நடைபவனி’ (Walk for Peace)...