இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

Date:

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியானது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தனது எக்ஸ் கணக்கில் நன்றி தெரிவித்தார்.

 

அந்தச் செய்தியில் ஜனாதிபதி அநுர,

நாம் அனைவரும் விரும்பும் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ததற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு

அவர்களுக்கு நன்றி.

கொழும்பில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டியின் இணை விருந்தினராக, இலங்கை ஐசிசி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறது.

பாதுகாப்பு கவலைகள் காரணமாக பலர் விலகியிருந்த நேரத்தில், 1996 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் கொழும்பில் விளையாடிய போது அவர்கள் காட்டிய ஒற்றுமையை இலங்கை மறக்கவில்லை – என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணப் போட்டியானது எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்து உலக வங்கியுடன் கலந்துரையாடல்

2026 தொடக்கம் 2031 வரையான 06 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி...

சேவையை விரிவுபடுத்தியுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம்!

செல்லுபடியாகும் சர்வதேச வெளிநாட்டு அனுமதிகளின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் சாத்தியம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் முக்கியமாக வறண்ட வானிலை நிலவும்...

‘சமநீதி’ மாதாந்த சஞ்சிகை வெளியீட்டு விழா நாளை கொழும்பில்

'சமநீதி' (Equity) என்ற பெயரிலான புதிய மாதாந்த சஞ்சிகையொன்று இம்மாதம் முதல்...