பெண்களுக்கு இரவு நேர வேலை : வர்த்தமானி அறிவித்தல்!

Date:

பெண்கள், இரவு நேரங்களில் துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் சிற்றுண்டி விநியோகஸ்தர்களாக (Waitresses) பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 தொழிலாளர் அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அவர்களினால், ‘கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் சட்டத்தில்’ மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் ஊடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைமுறையிலிருந்த சட்டத்தின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை மாலை 6.00 மணிக்குப் பின்னர் கழிப்பறை துப்புரவுப் பணியாளர்களாகச் சேவையில் ஈடுபடுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய திருத்தத்தின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட பெண்களை துப்புரவுப் பணியாளர்களாகவோ அல்லது சிற்றுண்டி விநியோகஸ்தர்களாகவோ மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரை பணியில் ஈடுபடுத்த முடியும்.

இரவு நேரத்தில் பணியாற்றும் பெண்களுக்கு பின்வரும் வசதிகளை வழங்குவது முதலாளிகளின் பொறுப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது:

பொருத்தமான தங்குமிட வசதி, போக்குவரத்து வசதிகள், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் நலன்புரி வசதிகள்.

இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் 51% ஆக இருந்தபோதிலும், தொழிலாளர் சந்தையில் அவர்களின் பங்களிப்பு 34% ஆக மட்டுமே உள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்குத் தேவையான மனித வளத்தை வழங்குவதற்கும், பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் இருக்கும் சட்டத் தடைகளைத் தளர்த்துவது காலத்தின் தேவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

காசாவில் மீண்டும் உயிர்பெற்ற பல்கலைக்கழகக் கல்வி: நீண்ட இடைவேளைக்குப் பின் கூடார வகுப்பறைகளுக்குத் திரும்பிய காசா மாணவர்கள்.

போரினால் நீண்டகாலமாக முடக்கப்பட்டிருந்த உயர்கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்கும் நோக்கில், தெற்கு...

இன நல்லிணக்கத்தை நோக்கிய பயணம்: நிதா அறக்கட்டளையின் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நாட்டில் இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும், மத நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில், நிதா...

பெலாரஸில் அதிரடி: தன்பாலின ஈர்ப்பை ஆதரிப்பது இனி கிரிமினல் குற்றம்!

பெலாரஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பு மற்றும் LGBTQ+ சமூகத்தினருக்கு ஆதரவாகப் பேசுவது...

இலங்கைக்கான எண்ணெய், சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார...