மர்ஹூம் எம்.ஐ எம்.மொஹிடீன் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் நிலையத்தின் ஏற்பாட்டில், இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்த இரண்டாவது வருடாந்திர கருத்தரங்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில், காலை 8:55 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடைபெறவுள்ளது
இந்த கருத்தரங்கிற்கு பொறியாளர் ஜஹ்பர் எம். இஸ்மாயில் தலைமை தாங்கவுள்ளார். இதில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி அவர்கள் பிராதான உரை ஆற்றவுள்ளார்.
பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தேவசிறி கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையில் இருக்கைப் பேராசிரியராக (Professor of History-Chair) உள்ளார்.
அங்கு அவர் 1991 இல் கலைமாணிப் பட்டமும், 2000 இல் முதுகலைத் தத்துவமாணி (M.Phil) பட்டமும் பெற்றார். நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக்கழகத்தில் 2007 இல் கலாநிதி/முனைவர் பட்டம் பெற்றார்.
2017 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, ஹெய்டல்பெர்க் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய நிறுவனத்தில் (SAI) இலங்கை ஆய்வுகள் பிரிவின் தலைவராக இருந்தார்.
தற்போது, சமூக விஞ்ஞானங்கள் மற்றும் மானிட ஆய்வுகள் தொடர்பான தேசிய உயர்நிலைக் கற்கைகள் மையத்தின் (NCAS) பதில் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.
ஒல்லாந்தர் (டச்சு) ஆட்சியின் கீழ் மேற்கு இலங்கையில் விவசாய சமுதாயம், 1740-1800 (லெய்டன்: பிரில், 2008) என்ற நூலின் ஆசிரியர் ஆவார்.
ஆய்வு மற்றும் கலந்துரையாடல் குழுக்களில் (Panels) பின்வரும் துறைசார் அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர்:
- பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (பேராதனைப் பல்கலைக்கழகம்)
- டாக்டர் எம்.எஸ். அனீஸ் (கொழும்பு பல்கலைக்கழகம்)
- டாக்டர் ரவூப் ஜைன்
- டாக்டர் அப்துல் ரஹீம் ஜெஸ்மில்
- இசட்.ஏ. ஜான்ஹிர்
- சிராஜ் மஷூர்
- ருடானே ஜாஹிர்
- எஸ்.எம். பாத்திமா சிம்லா
- எம்.ஆர்.எம். ரிஹாம்
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகளை ஆவணப்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர், 12 ஆம் திகதிக்கு முன்னர் தங்களது வருகையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புகளுக்கு:
ஜஹ்ஃபர்: 0777 963 129, சிராஜ்: 077 359 5111
எம்.ஐ.எம். மொஹிதீன் ஆராய்ச்சி மற்றும் ஆவண மையம் ஆர்வமுள்ள அனைவரையும் இந்த மதிப்புமிக்க நிகழ்விற்கு அன்புடன் அழைக்கிறது.
