இவ்வருட அரச வெசாக் பண்டிகை மாத்தறையில்!

Date:

இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மாத்தறை மாவட்டம், கம்புறுபிட்டிய, திஹகொட மிதெல்லவல புராண விகாரையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சாசனாரக்ஷக சபையின் பிரதான செயலாளர் வண. முகுனுவெல அனுருத்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட புத்த சாசன சபையின் மூன்றாவது கூட்டத்தொடர் இன்று நடைபெற்றதாகவும், அதிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இவ்வருட அரச வெசாக் பண்டிகையை மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

மே மாதம் 01 ஆம் திகதி ‘விசா’ நட்சத்திரம் இல்லாத காரணத்தினால், அந்தத் தினத்தை வெசாக் போயா தினமாக அறிவிப்பது உகந்ததல்ல எனத் திரைனிக்காய மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்குக் கடிதம் மூலம் அறியப்படுத்தியிருந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, போயா குழுவின் பரிந்துரைக்கு அமைய மே 30 ஆம் திகதி வெசாக் தினமாகத் தீர்மானிக்கப்பட்டதாக, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கடந்த ஜனவரி 24 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கடவுச்சீட்டு மற்றும் விசா வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக...

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் வருடாந்தம் சராசரியாக 900 சிறுவர் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதோடு, 2022...

பங்களாதேஷில் இன்று பொதுத்தோ்தல்:இந்தியாவுடனான உறவு இயல்புக்கு திரும்புமா?

அண்டை நாடான பங்களாதேஷில் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலின் வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை...

நாட்டின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை...