எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

Date:

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் விக்டர் அர்பன், மேற்கத்திய நாடுகளின் நவீன பாலினக் கொள்கைகளை (Gender Ideology) கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்:

“தாய் என்பவர் ஒரு பெண்; தந்தை என்பவர் ஒரு ஆண். இதுவே இயற்கையின் விதி. எங்கள் நாட்டு குழந்தைகளை நிம்மதியாக விடுங்கள். எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை.”என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் LGBTQ+உரிமைகள் மற்றும் பள்ளிகளில் பாலினக் கல்விக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் நிலையில், ஹங்கேரி அதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகளை “பாலின திணிப்புகளில்” இருந்து பாதுகாக்கப் போவதாகக் கூறும் ஹங்கேரி அரசு, இதற்காகப் புதிய சட்டங்களையும் திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் விக்டர் ஓர்பன், “தேசிய கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதே எங்களின் முதல் கடமை” எனத் தொடர்ந்து முழங்கி வருகிறார்.

Popular

More like this
Related

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம்...

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் கைது

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கோன்கஹாகே மற்றும் முன்னாள்...

இலங்கையின் பல பகுதிகளில் சூரியன் உச்சம்

சூரியனின் வடதிசை நோக்கிய நகர்விற்கு அமைவாக, ஏப்ரல் 05 முதல் 15 ஆம்...

புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,...