கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

Date:

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய பகுதிகளை இனங்கண்டு குறித்த பிரதேசங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் 4G பரந்த சேவை வசதிகளை வழங்கும் கிராமத்திற்கு தொலைத்தொடர்பு திட்டத்தை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் முக்கிய செயல்பாடு, செலவு பகிர்வு பொறிமுறையின் மூலம் தகவல் தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதாகும்.

தற்போது, திட்டத்தின் கீழ் சேவை வழங்குநர்களால் 83 தகவல் தொடர்பு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன, மேலும் கையடக்க தொலைபேசி சேவை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சேவை வழங்குநர்களின் இயக்க செலவுகள் அதிகரித்ததாலும், சில தகவல் தொடர்பு கோபுரங்களால் போதுமான வருமானம் ஈட்டப்படாததாலும் தொடர்புடைய கோபுரங்களின் கட்டுமானம் மந்தமடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...