ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

Date:

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள “அமைதிக் குழுவில்” (Board of Peace) முழுநேர உறுப்பினராக இணைய மெக்சிகோ மறுப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்த முதல் கூட்டத்தில், மெக்சிகோ சார்பில் ஐநா-வுக்கான அந்நாட்டு தூதர் பார்வையாளராகமட்டுமே கலந்து கொள்வார் என்று ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

“நாங்கள் பலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கிறோம். அமைதிக்கான ஒரு குழுவில் பாதிக்கப்பட்ட தரப்பான பலஸ்தீனத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அமைதி வாரியம் அவ்வாறு அமைக்கப்படவில்லை.”என்றார்.

இந்த அமைதிக் குழுவில் இஸ்ரேல் உறுப்பினராக உள்ள நிலையில், பலஸ்தீனம் சேர்க்கப்படவில்லை என்பதை மெக்சிகோ சுட்டிக்காட்டியுள்ளது.

பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கும் மெக்சிகோ, இரு நாடுகளின் பங்களிப்பும் இல்லாமல் எடுக்கப்படும் அமைதி முயற்சிகள் முழுமையடையாது எனக் கருதுகிறது.

ஏற்கனவே இந்தியா மற்றும் வத்திக்கான் போன்ற நாடுகள் இந்த குழுவில்  சேர ஆர்வம் காட்டாத நிலையில், லத்தீன் அமெரிக்காவின் முக்கிய நாடான மெக்சிகோவின் இந்த முடிவு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை)...

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை.

பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்குவது என்பது வெறும் வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யோசனை...