ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

Date:

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள “அமைதிக் குழுவில்” (Board of Peace) முழுநேர உறுப்பினராக இணைய மெக்சிகோ மறுப்பு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை வாஷிங்டனில் நடைபெறவுள்ள இந்த முதல் கூட்டத்தில், மெக்சிகோ சார்பில் ஐநா-வுக்கான அந்நாட்டு தூதர் பார்வையாளராகமட்டுமே கலந்து கொள்வார் என்று ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

“நாங்கள் பலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கிறோம். அமைதிக்கான ஒரு குழுவில் பாதிக்கப்பட்ட தரப்பான பலஸ்தீனத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அமைதி வாரியம் அவ்வாறு அமைக்கப்படவில்லை.”என்றார்.

இந்த அமைதிக் குழுவில் இஸ்ரேல் உறுப்பினராக உள்ள நிலையில், பலஸ்தீனம் சேர்க்கப்படவில்லை என்பதை மெக்சிகோ சுட்டிக்காட்டியுள்ளது.

பலஸ்தீனத்தை ஒரு இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிக்கும் மெக்சிகோ, இரு நாடுகளின் பங்களிப்பும் இல்லாமல் எடுக்கப்படும் அமைதி முயற்சிகள் முழுமையடையாது எனக் கருதுகிறது.

ஏற்கனவே இந்தியா மற்றும் வத்திக்கான் போன்ற நாடுகள் இந்த குழுவில்  சேர ஆர்வம் காட்டாத நிலையில், லத்தீன் அமெரிக்காவின் முக்கிய நாடான மெக்சிகோவின் இந்த முடிவு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...

2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 18,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவு

நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல்...