துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.

Date:

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரையான காலப்பகுதியில் தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் காத்திரமான தொகுப்புக்கள் அடங்கிய ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ என்ற நூல் வெளியீட்டு விழா துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

‘இதயங்களை இணைக்கும் இப்தார்” நோன்பு துறக்கும் நிகழ்வாகவும் சமூக நல்லிணக்க ஒன்று கூடலாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் எம்..முஹம்மது நாசர் நூல் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார்.

நிகழ்வில் துபாய் அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றதுடன் அவர்களது சார்பில் பேசிய பக்கர் சித்திகி , துபாய் மண்ணில் இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நடைபெறுவது பாராட்டத்தக்கது என்றார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக பல்வேறு துறைகளில் சமூகத்துக்காக பங்காற்றியமைக்காக பின்வருவோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

டாக்டர் அன்சாரி,பி.எஸ் அப்துர் ரஹ்மான், முஹமது பைஸ், ஏ. ஹமீத் யாசிர், ஏ.கௌசர் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். மஜக தலைவர் அவர்கள் தமிமுன் அன்சாரி இந்த விருதுகளை வழங்கி வைத்தார்.

ரமழான் கால இப்தார்கள் இது போன்ற அர்த்தமுள்ள நிகழ்வுகளாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...