நாமலின் உரையை ரத்து செய்த ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் யூனியன்

Date:

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ லண்டன் ஒக்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஸ் சங்கங்களில் நடத்தவிருந்த உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவரின் உரை தொடர்பான நிகழ்வுகளை குறித்த சங்கங்கள் ரத்து செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. லண்டனிலுள்ள தமிழ் மாணவ குழுக்களின் எதிர்ப்பினையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த உரை நிகழ்வுகளை முன்னிட்டு நாமல் ராஜபக்ஷ, அவரது பாரியார் உட்பட மொட்டு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் லண்டன் பயணித்துள்ளனர். ஏற்கனவே கேம்பிரிட்ஜ் யுனியன் நாமலின் உரை தொடர்பான நிகழ்ச்சி திட்டமிடலை ரத்து செய்திருந்தது.

மாணவர்களின் போராட்டம் காரணமாக பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவ்வறான உரையின் போது மாணவர்களிடமிருந்து நேரடியான, வெளிப்படையான கேள்விகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் இருப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.

இந்நிலையில் எதிர்ப்பு காரணமாக நிகழ்வின் நோக்கம் சரியான முறையில் நிறைவேறாது என்ற தீர்மானத்திற்கு வந்த நிலையில் நாமலின் உரை நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...