புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

Date:

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை) மாலை தென்பட்டதை அடுத்து, நாளை பெப்ரவரி 19, வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிறைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு ரமழான் நோன்பு தொடங்குவதில் நாடுகளுக்கு இடையே ஒரு நாள் வித்தியாசம் காணப்படுகிறது:

இன்று (18) நோன்பு தொடங்கிய நாடுகள்: சவூதி அரேபியா, ஜிபூட்டி, ஏமன், கத்தார், பஹ்ரைன், பலஸ்தீனம், சூடான், குவைத், ஈராக், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

நாளை (19) நோன்பு தொடங்கும் நாடுகள்: இலங்கை, எகிப்து, துருக்கி, துனிசியா, ஜோர்டான், லிபியா, இந்தோனேசியா, ஈரான், ஓமான், சிங்கப்பூர், சிரியா மற்றும் அல்ஜீரியா.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பை முன்னிட்டு, இன்று இரவு முதல் பள்ளிவாசல்களில் விசேட ‘தராவீஹ்’ தொழுகைகள் ஆரம்பமாகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலன பகுதிகளில் 100 மி.மீ வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது!

இலங்கைக்கு தென்கிழக்காக தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு மேலாக உருவாகியுள்ள குறைந்த...

கண்டி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிட்டார் IMF பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா: அரசாங்கத்தின் துரித நடவடிக்கைக்குப் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தலைமையிலான தூதுக்குழுவினர்,...

ட்ரம்ப்பின் ‘அமைதிக் குழுவில்’ இணைய மெக்சிகோ மறுப்பு: பார்வையாளராக மட்டும் பங்கேற்க முடிவு!

காசா போர் நிறுத்தத்தை மேற்பார்வையிடுவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள...

சிறுவர் பராமரிப்புச் சீர்திருத்தம் தொடர்பான உலகளாவிய சாசனத்தில் இணையும் முதலாவது தெற்காசிய நாடாக இலங்கை.

பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்குவது என்பது வெறும் வார்த்தைகளுடன் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யோசனை...