புனித ரமழான் நோன்பு நாளை முதல் இலங்கையில் ஆரம்பம்: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!

Date:

இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை இன்று (பெப்ரவரி 18, புதன்கிழமை) மாலை தென்பட்டதை அடுத்து, நாளை பெப்ரவரி 19, வியாழக்கிழமை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற விசேட பிறைக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆண்டு ரமழான் நோன்பு தொடங்குவதில் நாடுகளுக்கு இடையே ஒரு நாள் வித்தியாசம் காணப்படுகிறது:

இன்று (18) நோன்பு தொடங்கிய நாடுகள்: சவூதி அரேபியா, ஜிபூட்டி, ஏமன், கத்தார், பஹ்ரைன், பலஸ்தீனம், சூடான், குவைத், ஈராக், லெபனான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

நாளை (19) நோன்பு தொடங்கும் நாடுகள்: இலங்கை, எகிப்து, துருக்கி, துனிசியா, ஜோர்டான், லிபியா, இந்தோனேசியா, ஈரான், ஓமான், சிங்கப்பூர், சிரியா மற்றும் அல்ஜீரியா.

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பை முன்னிட்டு, இன்று இரவு முதல் பள்ளிவாசல்களில் விசேட ‘தராவீஹ்’ தொழுகைகள் ஆரம்பமாகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்...

இன்று கிடைக்கப்பெறும் அஸ்வெசும கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளிகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (12) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்...