வாகன இலக்கத் தகடுகளை பெறாத உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!

Date:

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் அச்சிடப்பட்ட சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாகன இலக்கத் தகடுகளை அவற்றின் உரிமையாளர்கள் பொறுப்பேற்க வராததால், திணைக்களத்தின் களஞ்சியசாலைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் அச்சிடப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலக்கத் தகடுகள் கொழும்பு தலைமை அலுவலகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

இந்த பாரிய அளவிலான தகடுகள் அடுக்கப்பட்டிருப்பதால், திணைக்களப் பணியாளர்கள் தமது அன்றாட பணிகளை முன்னெடுப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

அதேவேளை ஏனைய மாகாணங்களுக்கு சுமார் 1,46,712 இலக்கத் தகடுகள் அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில் வாடிக்கையாளர்கள் உடனடியாகத் தமக்குரிய இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...