இந்தியா-பாகிஸ்தான் போட்டி உறுதி; பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!

Date:

கேள்விக் குறியாவிருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டியானது நடைபெறும் என்பதை பாகிஸ்தான் பிரதமர் உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு தனது எக்ஸ் கணக்கில் நன்றி தெரிவித்தார்.

 

அந்தச் செய்தியில் ஜனாதிபதி அநுர,

நாம் அனைவரும் விரும்பும் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ததற்காக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புக்கு

அவர்களுக்கு நன்றி.

கொழும்பில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

போட்டியின் இணை விருந்தினராக, இலங்கை ஐசிசி மற்றும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறது.

பாதுகாப்பு கவலைகள் காரணமாக பலர் விலகியிருந்த நேரத்தில், 1996 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் கொழும்பில் விளையாடிய போது அவர்கள் காட்டிய ஒற்றுமையை இலங்கை மறக்கவில்லை – என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி:20 உலகக் கிண்ணப் போட்டியானது எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இரவு 07.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...

ரோஹிங்கியா மக்களின் மோசமடைந்து வரும் அவலநிலையை உரையாற்ற சர்வதேச கவனம் தேவை: ஐ.நா. கோரிக்கை!

மியான்மர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் உள்ள அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த...