புனிதமான ரமழான் மாதம் நம்மை வந்தடைந்திருக்கிறது. இது வெறும் பசியோடு இருக்கும் மாதமல்ல; மாறாக, பக்குவத்தையும், சகிப்புத்தன்மையையும், பிறர் மீதான கருணையையும் வளர்த்தெடுக்கும் ஒரு உன்னதப் பயணம்.
ஆன்மீக ரீதியாகவும், மனிதாபிமான ரீதியாகவும் நம்மை செதுக்கிக்கொள்ளும் ஒரு மாதமாக இது அமைவதைப் பற்றிய விரிவான ஒரு ஆக்கத்தை இப்போது பார்க்கலாம்…
அவர் நோன்பை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்: பொதுமக்களின் நோன்பு (வயிற்றையும் காம இச்சையையும் அடக்குதல்), சிறப்புக்குரியயோரின் நோன்பு (உடல் உறுப்புகளைப் பாவங்களிலிருந்து பாதுகாத்தல்), மிகச் சிறப்புக்குரியோரின் நோன்பு (இதயம் அல்லாஹ்வைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும் விலகி இருப்பது).
அவர் உள்ளார்ந்த நோன்பை மிகவும் வலியுறுத்துகிறார்; உண்மையான நோன்பு என்பது ஆசைகளை அடக்கி ஷைத்தானை பலவீனப்படுத்துவதாகும் என்று கூறுகிறார்.
இமாம் கஸ்ஸாலியின் பார்வையில் நோன்பின் முக்கிய ஆன்மீக இரகசியங்கள் மற்றும் நோன்பின் நிலைகள்:
1. பொதுமக்களின் நோன்பு: நோன்பை முறிக்கும் காரியங்களான உணவு, பானம், உடலுறவு ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது.
2. சிறப்புக்குரியோரின் நோன்பு: கண்களைத் தாழ்த்துதல், நாக்கை கீபத் மற்றும் நமீமாவிலிருந்து (புறம் மற்றும் கோல்) காக்குதல், காதுகளை ஹராமானவற்றிலிருந்து விலக்குதல் போன்ற உறுப்புகளின் நோன்பு.
