எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை. ஹங்கேரி பிரதமர்.

Date:

பாலின அடையாளம் மற்றும் பாரம்பரிய குடும்ப விழுமியங்கள் குறித்த விவாதத்தில், ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிரதமர் விக்டர் அர்பன், மேற்கத்திய நாடுகளின் நவீன பாலினக் கொள்கைகளை (Gender Ideology) கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்:

“தாய் என்பவர் ஒரு பெண்; தந்தை என்பவர் ஒரு ஆண். இதுவே இயற்கையின் விதி. எங்கள் நாட்டு குழந்தைகளை நிம்மதியாக விடுங்கள். எங்களுக்குத் தேவையற்ற கூடுதல் பாலின அடையாளங்கள் தேவையில்லை.”என்று ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகள் LGBTQ+உரிமைகள் மற்றும் பள்ளிகளில் பாலினக் கல்விக்கு ஆதரவாகச் செயல்பட்டு வரும் நிலையில், ஹங்கேரி அதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

குழந்தைகள் பாதுகாப்பு: குழந்தைகளை “பாலின திணிப்புகளில்” இருந்து பாதுகாக்கப் போவதாகக் கூறும் ஹங்கேரி அரசு, இதற்காகப் புதிய சட்டங்களையும் திருத்தங்களையும் கொண்டு வந்துள்ளது.

தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் விக்டர் ஓர்பன், “தேசிய கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பைப் பாதுகாப்பதே எங்களின் முதல் கடமை” எனத் தொடர்ந்து முழங்கி வருகிறார்.

Popular

More like this
Related

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...