கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

Date:

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. இதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,545 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மற்றும் முப்படைகளின் ஒத்துழைப்புடன் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஏதேனும் அவசர நிலைகள் ஏற்பட்டால் அவற்றை எதிர்கொள்ளவும், போக்குவரத்து வசதிகள் குன்றிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

டிட்வா சூறாவளி காரணமாக தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட கட்டாய ஆவணங்களை இழந்த மாணவர்களுக்காக விசேட சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையை இழந்த மாணவர்கள், கடவுச்சீட்டு அளவிலான இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சைக்குத் தோற்ற முடியும்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபரிடமும், தனியார் விண்ணப்பதாரிகள் கிராம சேவகரிடமும் அந்தப் புகைப்படங்களில் கையொப்பம் பெற்று சான்றுப்படுத்த வேண்டும்.

சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்து மூன்று மாதங்களுக்குள் அதன் பெறுபேறுகளை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இதன்போது அறிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு...

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை...