கிராமங்களுக்கு 4G வசதியை விரிவுபடுத்த திட்டம்: அமைச்சரவை அனுமதி

Date:

தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பிரதேசங்கள் மற்றும் குறைந்த தொடர்பாடல் வசதிகளுடன் கூடிய பகுதிகளை இனங்கண்டு குறித்த பிரதேசங்களில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கையில் 4G பரந்த சேவை வசதிகளை வழங்கும் கிராமத்திற்கு தொலைத்தொடர்பு திட்டத்தை மேம்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கையடக்க தொலைபேசி சேவை வழங்குநர்கள் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டத்தின் முக்கிய செயல்பாடு, செலவு பகிர்வு பொறிமுறையின் மூலம் தகவல் தொடர்பு கோபுரங்களை நிர்மாணிப்பதாகும்.

தற்போது, திட்டத்தின் கீழ் சேவை வழங்குநர்களால் 83 தகவல் தொடர்பு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன, மேலும் கையடக்க தொலைபேசி சேவை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி காரணமாக, சேவை வழங்குநர்களின் இயக்க செலவுகள் அதிகரித்ததாலும், சில தகவல் தொடர்பு கோபுரங்களால் போதுமான வருமானம் ஈட்டப்படாததாலும் தொடர்புடைய கோபுரங்களின் கட்டுமானம் மந்தமடைந்துள்ளது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...