இலங்கையின் கொழும்புக்கும் இந்தியாவின் அகமதாபாத்துக்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் தொடங்குவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் அகமதாபாத்திற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.
இதன் மூலம், இலங்கையில் உள்ள பக்தர்கள் குஜராத்துக்குச் சென்று மத யாத்திரை நடவடிக்கைகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
