சர்வதேச தாய்மொழி தினம் இன்றாகும்

Date:

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி தாய்மொழி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மொழிசார்ந்த மற்றும் பல்வேறு கலாசார பண்பாடுகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துகிறது.

1999ம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டின் போது சர்வதேச தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டது. 2000மாம் ஆண்டுக்கு பின்னர் அது உலகளவில் அனுஷ்டிக்கப்பட ஆரம்பித்தது.

நிலையான சமூக கட்டியெழுப்பலுக்கு கலாசார மற்றும் பல் மொழி கலாசாரம் அத்தியாவசியமானதென யுனெஸ்கோ சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறானதொரு தினத்தை கொண்டாடுவதற்கான முதல் யோசனையை பங்களாதேஸ் முன்வைத்திருந்தது.

குறித்த நாடு தாய்மொழியை பாதுகாப்பதற்காக முகம்கொடுத்த வரலாற்று அனுபவங்கள் மற்றும் மொழி சார்ந்த பல்வேறு விடயங்கள் உட்பட பல் கலாசாரத்திற்கென அந்நாட்டு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது.

1952ம் ஆண்டு அந்நாட்டு அரசு உர்து மொழியை தேசிய மொழியாக அறிவிக்க எடுக்க தீர்மானத்திற்கு அந்நாட்டில் பாரிய எதிர்ப்பு அலைகள் ஏற்ப்பட்டன. இந்த போராட்டத்தில் பல மாணவர்கள் உயிர் தியாகம் செய்தனர். பின்னர் பெங்காலி மொழி தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய மொழி உரிமைக்காக மேற்கொள்ளப்பட்ட குறித்த அர்ப்பணிப்பை நினைவுகூறும் வகையில் 1999ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 21ம் திகதி சர்வதேச தாய்மொழி தினமாக பெயரிடப்பட்டது.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...