சிறுவர் துஷ்பிரயோகம்: நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவை.

Date:

குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் தற்போது 4,000-க்கும் அதிகமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத் திருத்த தண்டனைச் சட்டக்கோவையின் படி, நாடு முழுவதும் உள்ள மேல் நீதிமன்றங்களில் 4,289 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவற்றில் 1,683 வழக்குகள் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

சிறுவர்கள் தொடர்பான ஆபாச வெளியீடுகள், சிறுவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், பாலியல் தொழிலுக்காகச் சிறுவர்களை வாடகைக்கு எடுத்தல் அல்லது பணியில் அமர்த்துதல், சிறுவர்கள் மீதான கொடூரம், பாலியல் வல்லுறவு மற்றும் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்கள் தொடர்பில் சட்டமா அதிபரால் மேல் நீதிமன்றங்களில் இந்த அதிவேகக் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விளையாட்டுத் துறையை மேம்படுத்த ஆசிய ரக்பி சம்மேளனம் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பு!

துபாய், ஐக்கிய அரபு அமீரகம் – இலங்கையின் ரக்பி விளையாட்டை சர்வதேச...

தபால் கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறைக்கு!

தபால் கட்டணத் திருத்தம் இன்று (09) முதல் நடைமுறைக்கு வருகிறது. பல்வேறு பிரிவுகளின்...

நாட்டின் சில பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (09) நாட்டின் காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களில் சில...

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...