தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

Date:

தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

5.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 13,450 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை 15,000 மில்லியன் ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் பாரிய நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்துக்கு 27 மில்லியன் ரூபா செலவில் 209 பாதுகாப்பு கெமராக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கணினி மயமாக்கல் திட்டத்தில் 225 கணினிகளுக்காக 74 மில்லியன் ரூபாவும், 1,500 டப்லெட் கணினிகளுக்காக 101 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வரவைப் பதிவு செய்ய 657 கைரேகை இயந்திரங்களை 31 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு, பொலன்னறுவை, தபால் தலைமையகம் மற்றும் மத்திய தபால் பரிமாற்றம் ஆகிய கட்டடங்களில் 24 மில்லியன் ரூபா செலவில் சூரிய சக்தி மின்சாரத் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இப்பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

உலகில் தேடப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர் எல் மென்சோ சுட்டு கொலை: மெக்சிகோவில் உச்சக்கட்ட பதற்றம்!

உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ, மெக்சிகோவில்...

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று சந்தைக்கு

இன்றைய தினம் ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு...

நாட்டை விட்டு நீங்கும் குறைந்த தாழமுக்கம்: மழை நிலை குறைவடையும் வாய்ப்பு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் காணப்படும் குறைந்த தாழமுக்க வலயம் நாட்டை...