அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் தட்டுப்பாடு: தமிழ், முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் பாதிப்பு!

Date:

அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களின் பற்றாக்குறை நிலவுவதால், நாளாந்தம் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தல்களைத் தமிழ் மொழியில் பெற்றுக்கொள்வதில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, அண்மையில் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று முன்தினம் வரை தமிழ் மொழியில் வெளியாகவில்லை என விண்ணப்பிக்கத் தயாராக உள்ள தமிழ் பேசும் பட்டதாரிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மொழிபெயர்ப்புத் தாமதம் காரணமாகத் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் சரியான நேரத்தில் தகவல்களைப் பெற முடியாமல் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இது குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் ஷாம் நவாஸ், ஊடகத்துறை அமைச்சருக்கு எழுத்துமூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த மொழிப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கு புதிய பஸ்கள் இறக்குமதி

‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப்...

இந்தியா – பாகிஸ்தான் போட்டி: இலங்கையில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

கொழும்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான்...

ஊழலில் வீழ்ச்சி கண்டு வரும் இலங்கை

Transparency International ஊடாக வெளியிடப்பட்டுள்ள 2025 ஊழல் குறிகாட்டி பட்டியலில் (CPI) ...

NewsNow தலைமை ஆசிரியர் ஃபியாஸ் முஹம்மது பிரியாவிடை: பஹன மீடியா நிறுவனத்தில் பாராட்டு விழா!

NewsNow செய்தித் தளத்தின் தலைமை ஆசிரியராகவும், பஹன மீடியா (Pahana Media)...