ஜெனீவாவில் நடைபெற்ற ஈரான் – அமெரிக்கா இடையிலான அணுசக்திப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாடுமின்றி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்க இராணுவம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது அதிரடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஜெனீவாவில் நடைபெற்று வந்த உயர்மட்ட அணுசக்திப் பேச்சுவார்த்தை இன்று திடீரென முறிந்தது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் கூட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் அமெரிக்க ராணுவம் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் (IDF) இணைந்து அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) இந்தத் தாக்குதலை ஒருங்கிணைத்து வருகிறது.
ஈரானின் ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்களை முடக்குவதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் இந்த நேரடித் தலையீடு காரணமாக மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
