சவூதியில் ரமழான் பிறை தென்பட்டது: நாளை முதல் புனித நோன்பு ஆரம்பம்

Date:

சவூதி அரேபியாவில் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டுள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மற்றும் மத விவகார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 பிறை தென்பட்டதை அடுத்து, சவூதி அரேபியாவில் நாளை (18, புதன்கிழமை) முதல் புனித ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது.

இன்று இரவு இஷா தொழுகையைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவின் அனைத்துப் பள்ளிகளிலும் ரமழான் மாதத்திற்கான சிறப்பு ‘தராவீஹ்’ தொழுகைகள் நடைபெறும்.

இலங்கையைப் பொறுத்தவரை, ரமழான் பிறை குறித்து நாளை (புதன்கிழமை) இரவு கொழும்பு பெரிய பள்ளிவாசல் மற்றும் பிறைக் குழு கூடி இறுதி முடிவை அறிவிக்கும்.

புனித ரமழான் மாதத்தை வரவேற்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியப் பெருமக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

Popular

More like this
Related

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் விழாக்களை எளிமையான நடத்துங்கள்: கல்வி அமைச்சு

பாடசாலைகளில் முன்னெடுக்கப்படும் பல்வேறு விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு முன்னைய அறிவுறுத்தல்களைப் புறக்கணித்து...

கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய பல்கலைக்கழகம் இடையே புதிய கல்விசார் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியிலான கல்வித் தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில், கொழும்பு பல்கலைக்கழகம்...

விடுமுறை காலச் சுற்றுலாக்களின் போது முஸ்லிம் சமூகம் பேண வேண்டிய ஒழுக்கக்கோவைகள்: உலமா சபை விசேட வழிகாட்டல்கள்

விடுமுறை காலங் களில் மேற்கொள்ளப் படும் சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களின் போது...

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்கள் நிதியுதவி!

நான்காண்டு கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது...