துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.

Date:

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன் அன்சாரி அவர்கள் 2016 முதல் 2021 வரையான காலப்பகுதியில் தமிழக சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகளின் காத்திரமான தொகுப்புக்கள் அடங்கிய ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ என்ற நூல் வெளியீட்டு விழா துபாய் லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

‘இதயங்களை இணைக்கும் இப்தார்” நோன்பு துறக்கும் நிகழ்வாகவும் சமூக நல்லிணக்க ஒன்று கூடலாகவும் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் பொதுச் செயலாளர் எம்..முஹம்மது நாசர் நூல் குறித்த அறிமுக உரையை நிகழ்த்தினார்.

நிகழ்வில் துபாய் அரசுத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றதுடன் அவர்களது சார்பில் பேசிய பக்கர் சித்திகி , துபாய் மண்ணில் இது போன்ற சமூக நல்லிணக்க நிகழ்வுகள் நடைபெறுவது பாராட்டத்தக்கது என்றார்.

நிகழ்வின் முக்கிய அம்சமாக பல்வேறு துறைகளில் சமூகத்துக்காக பங்காற்றியமைக்காக பின்வருவோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

டாக்டர் அன்சாரி,பி.எஸ் அப்துர் ரஹ்மான், முஹமது பைஸ், ஏ. ஹமீத் யாசிர், ஏ.கௌசர் ஆகியோர் இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். மஜக தலைவர் அவர்கள் தமிமுன் அன்சாரி இந்த விருதுகளை வழங்கி வைத்தார்.

ரமழான் கால இப்தார்கள் இது போன்ற அர்த்தமுள்ள நிகழ்வுகளாக அமைய வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் உடல் ஆரோக்கியம் மோசமடைந்து வருவதால் ஜனாதிபதிக்கு கடிதம்

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் ஏற்பாட்டில் நாளை புத்தளத்தில் இஸ்லாமிய மாநாடு!

இலங்கையில் பல தசாப்த காலங்களாகத் தொடர்ந்து இஸ்லாமியப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு...

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...