நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (16) இலங்கை வந்தடைந்தார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக வருகை தந்த அவர், எதிர்வரும் புதன்கிழமை வரை நாட்டில் தங்கியிருப்பார்.

இந்த விஜயத்தின் போது, கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, அரசாங்க அதிகாரிகள் மற்றும் முக்கிய தரப்பினரை சந்திக்கவுள்ளதுடன், ‘டித்வா’ (Ditwa) சூறாவளியினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரடியாக அவதானிக்கவுள்ளார்.

அத்துடன், நாட்டை வழமைக்குக் கொண்டு வரும் பணிகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய வழிகள் மற்றும் நாட்டின் பிரஜைகளுக்கு மிகவும் வலுவான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது

Popular

More like this
Related

நாட்டில் நிலவும் கடும் வெப்பம்: புத்தாண்டு விளையாட்டு விழாக்களுக்கு சுகாதார எச்சரிக்கை!

நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு...

பாடசாலைகளுக்கான முதலாம் தவணை நிறைவு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சு.

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணித்து, மத்திய கிழக்கு...

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை...