தென்மேற்கு வங்காள விரிகுடா கடலில் காணப்படும் குறைந்த தாழமுக்க வலயம் நாட்டை வீட்டு நீங்குவதால் தற்போது நிலவும் மழை நிலைமையில் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு , வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை எதிர்பார்க்கப்படுகிறது. காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்யும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
