எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது : ஜனாதிபதி உறுதி: மேலதிக தேவைகளுக்காக ஏற்கெனவே ஒப்பந்தம்

Date:

மார்ச் மாதத்திற்காக 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ சமையல் எரிவாயு ஏற்கனவே வந்தடைந்துள்ளதோடு, இன்னும் இரண்டு நாட்களில் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு எதிர்பார்க்கப்படுவதாக விசேட ஊடக சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மார்ச் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு தேவை 33,000 மெட்ரிக் தொன்னாக இருந்தபோதிலும், இத்துறையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று சந்தைக்கு போதிய கையிருப்புகளை வெளியிடாத காரணத்தால், அதிகாரிகள் 38,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஓடர் செய்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை தமிழ் சிங்களப் புத்தாண்டு காலத்திலும் தட்டுப்பாடுகளின்றி எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்தார்.

 

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...