ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

Date:

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத் தெரிவிப்பதற்காக, அந்த நாட்டு ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடியுள்ளார்.

இது தொடர்பாக ‘X’ தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், அனைத்து விதமான வன்முறைகள் மற்றும் பயங்கரவாதச் செயல்களைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த இக்கட்டான தருணத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை ஒற்றுமையுடன் நிற்பதாகவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்துடன் இலங்கை எப்போதும் உறுதியாக நிற்பதுடன், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...

சலாம் ரமழான் 2026: கொழும்பு கிரீன் பாத்தில் தொடங்கிய கலாசார விழா!

இலங்கையின்  முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண...