நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

Date:

இன்றையதினம் (17) நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேல், சப்ரகமுவ, தென், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், மொணராகலை, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பக் குறிகாட்டி, அதாவது மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே தேவையின்றி வெளியில் நடமாடுவதைக் குறைப்தோடு, போதியளவில் நீரை உள்ளெடுத்தல் உள்ளிட்ட போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கொழும்பிலிருந்து காலி ஊடாக அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இஸ்லாமிய வெறுப்புணர்வுக்கு எதிராக ஜெனீவாவில் கைகோர்த்த OIC மற்றும் ஐநா.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 61வது கூட்டத்தொடருக்கு இடையே, இஸ்லாமிய வெறுப்புணர்வை...

பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை வாரத்தில் நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கும்.

எரிபொருள் நெருக்கடி காரணமாக, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற...

அரசு அலுவலகப் பணிகளைத் தொடர்வது தொடர்பாக விசேட சுற்றறிக்கை!

நாட்டில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியில், எரிபொருள் கையிருப்பைப் பாதுகாக்கும் பொருட்டு,...

ஸகாதுல் பித்ருடன் புனித ரமழானை நிறைவு செய்வோம்!

-முஹம்மத் பகீஹுத்தீன் ஸகாதுல் பித்ர் என்பது வசதியுள்ள அனைவர் மீதும் ரமழானில் கடமையாகும்...