பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

Date:

பேருந்துக் கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவு இன்று (23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அண்மைய எரிபொருள் விலை உயர்வு, குறிப்பாக டீசல் விலை உயர்வு, பேருந்துக் கட்டணத் திருத்த சூத்திரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

இது தற்போதைய பேருந்துக் கட்டணங்களுடன் ஒப்பிடும்போது 10%-க்கும் அதிகமான உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.

 

திருத்தப்பட்ட பேருந்துக் கட்டண நடைமுறையை செயல்படுத்துவதற்கான ஒப்புதலைக் கோரி அமைச்சரவை அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைமை பணிப்பாளர் கலாநிதி நிலன் மிராண்டா குறிப்பிட்டார்.

அதன்படி, இந்த முன்மொழிவு ஒப்புதலுக்காக இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கட்டணத் திருத்தம் நேற்று (22) அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பல பேருந்து சங்கங்கள் முன்னதாகக் கூறியிருந்தன.

கட்டண உயர்வு அங்கீகரிக்கப்படும் வரை பேருந்துப் பணிகளைத் தொடர்வது சாத்தியமில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்னவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...