விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

Date:

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த பஸ் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும். நாட்டின் பொது போக்குவரத்து துறையில் விசேட தேவையுடையவர்களுக்கான போக்குவரத்து உரிமைகளை வழங்கும் வகையில் இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதுவரைக் காலமும் இதுபோன்றதொரு சந்தர்ப்பம் குறித்த சமூகத்தினருக்கென பெற்றுக்கொடுக்கப்படவில்லை.

சக்கரை நாற்காலி பயன்படுத்தும் விசேட தேவையுடையவர்கள் இலகுவாக ஏறக்கூடிய வகையில் 430.7 மில்லியன் ரூபா செலவில் பிரத்தியேக மிதி பலகையைக் கொண்டதாக இந்த பஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குளிரூட்டப்பட்ட குறித்த 10 பஸ் வண்டிகள் நாட்டை வந்தடைந்துள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட குறித்த பஸ் வண்டிகள் மெட்ரோ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புத்தாண்டு என்பது பண்டிகை மட்டுமல்ல, எமது கலாசார விழுமியங்களில் பொதிந்துள்ள சுபீட்சம், ஒற்றுமை, சகவாழ்வு: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து...

கூட்டுச் செயல்பாடுகள் மூலம் வெளிப்படும் சமூக-கலாசார பிணைப்புடன் இந்த புத்தாண்டு அமைய நல்வாழ்த்துகள்: ஜனாதிபதியின் புத்தாண்டு செய்தி

பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும்...

அமைதிப்பேச்சு: பாகிஸ்தான் சென்றார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்: பாகிஸ்தானில் உற்சாக வரவேற்பு.

ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை...

வாகனங்களுக்கான எரிபொருள் QR முறைமை நீக்கம்?

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி...