‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள சுற்றுலா மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார்.
பூட்டான், சைப்ரஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.
தனது இந்தப் பயணத்தின் போது, பிராந்திய பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
