காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45 பேரின் உடல்கள் இன்று (13) ஈரானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
காலி வைத்தியசாலையின் குளிரூட்டப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டிருந்த இந்த உடல்கள் தற்போது மத்தள வானூர்தி நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு காலி பிரதான நீதிவான் வழங்கிய உத்தரவுக்கு அமையவே குறித்த உடல்கள் இன்று வானூர்தி மூலம் ஈரானுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
ஏனைய உடல்கள் கட்டங்கட்டமாக ஈரானுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
