நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Date:

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

இதன்படி 317 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை81 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 398 ரூபாவாகும்.

365 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 455 ரூபாவாகும்.

303 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 382 ரூபாயாகும்.

353 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 443 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை255 ரூபாவாகும்.

Popular

More like this
Related

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...

பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...