பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

Date:

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல் என்ற இளைஞர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என இன்று (23) உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.

2024 அக்டோபரில் சமூக ஊடகங்களில் இஸ்ரேலை எதிர்த்த ஸ்டிக்கர் பதிவுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த இளைஞர் சுமார் ஒன்பது மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்கள் ஜனக் டி சில்வா, சம்பத் விஜேரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, நீதிமன்றில் முன்னிலையான தெஹிவளை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி H.M.A.B. ஹேரத், தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார்.

அத்துடன், குறித்த இளைஞரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்காகத் தனது வருத்தத்தைத் தெரிவித்த அவர், பகிரங்க நீதிமன்றத்தில் 2 மில்லியன் ரூபா நஷ்டஈட்டுத் தொகையை வழங்கினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, இந்த இளைஞருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கு எந்தவொரு சட்ட ரீதியான அடிப்படையும் இல்லை என சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவுறுத்தியதை அடுத்து, கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே அவரை விடுதலை செய்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

இரு தரப்பினரும் சமரசத்திற்கு இணங்கியதையடுத்து, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்தது.

அத்துடன், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த முறைப்பாட்டைத் திரும்பப் பெறுவதற்கும் குறித்த இளைஞர் இதன்போது இணக்கம் தெரிவித்தார்.

தவறான தகவல்களின் அடிப்படையில் ஒன்பது மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த இளைஞருக்கு நீதி கிடைத்துள்ளதாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...

எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தயார்: ஈரான் தூதுவர்!

இலங்கையுடனான இருதரப்பு உறவில் ஈரானின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கைக்கான ஈரான்...