லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலையும் அதிகரிப்பு

Date:

லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நேற்று (11) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையினை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கொழும்பு மாவட்டத்தில் அதன் புதிய விலை 4,330 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அதேநேரம், 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,862 ரூபாவாக உயர்ந்துள்ளது.

உலகளாவிய புவிசார் அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி சந்தைகளைப் பாதிக்கும் தொடர்ச்சியான மோதல்கள் காரணமாக விலை திருத்தம் அவசியமானது என்று நிறுவனம் கூறியது.

அதேநரேம், நாடு தழுவிய விநியோக வலையமைப்பு மூலம் தடையற்ற சேவையைப் பேணுவதோடு, இலங்கை முழுவதும் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் உயர்தர எரிவாயுவை தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதில் உறுதியாக இருப்பதாக லாஃப்ஸ் கேஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக லிட்ரோ கேஸ் நிறுவனமும் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...