இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025.

Date:

இலங்கை வரலாற்றிலேயே அதிகளவான கடன் தவணைகள் செலுத்தப்பட்ட ஆண்டு 2025 என கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற சமூக அபிவிருத்தி சபைப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதிகளவான கடன் தொகை 2028ஆம் ஆண்டிலேயே செலுத்தப்பட வேண்டும் எனப் பலரும் கூறி வந்தாலும், 2025ஆம் ஆண்டில் 3900 மில்லியன் டொலர் கடன் தவணையைச் செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், 2028ஆம் ஆண்டில் செலுத்த வேண்டிய தொகை 3.2 மில்லியன் டொலர் மாத்திரமே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 2100 மில்லியன் டொலர் முதல் 2200 மில்லியன் டொலர் வரை செலவிடப்பட்ட போதிலும், 1700 மில்லியன் டொலர் மேலதிக இருப்பை (Surplus) பதிவு செய்ய அரசாங்கம் முடிந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 29,300 மில்லியன் டொலர் வருமானத்தில், 27,600 மில்லியன் டொலர் மாத்திரமே செலவிடப்பட்டமையினால் இவ்வாறானதொரு மேலதிக இருப்பை எட்ட முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...