20 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற இரு அரச அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் கடமையாற்றும் தீயணைப்பு அதிகாரி மற்றும் மீட்பு பணியாளர் ஒருவர் இவ்வாறு இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர்.
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்வைத்த முறைப்பாட்டிற்கமைய இந்த கைது இடம்பெற்றுள்ளது. 2026ம் ஆண்டுக்கென சுற்றுலா உணவகமொன்றிற்கு தீ பாதுகாப்பு உத்தரவாத சான்றிதழை வழங்குவதற்காக இந்த இலஞ்ச பணம் கோரப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 40 ஆயிரம் ரூபாவை கோரிய போதிலும் அதனை 35000 மாக குறைத்துள்ளனர். அதில் 20 ஆயிரம் ரூபாவை இரண்டாம் கட்டமாக பெறும் சந்தர்ப்பத்திலேயே இவர்கள் கைதாகியுள்ளனர்.
சந்தேக நபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 20ம் திகதி வரை விளக்கமறியல் வைக்கப்பட்டனர்.
