600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தகம், வணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

விலைக் குறைப்புகளுடன் இணைந்து, உள்ளூராட்சிச் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளைக் கண்டறியும் விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...