600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

Date:

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை சதொச விற்பனை நிலையங்கள் மூலம் கிடைக்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வர்த்தகம், வணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதே இந்த முயற்சியின் நோக்கம் என்று பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜெயவர்தன தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி அமைச்சர் மேலும் உறுதியளித்தார்.

விலைக் குறைப்புகளுடன் இணைந்து, உள்ளூராட்சிச் சந்தையில் அதிக விலைக்குப் பொருட்களை விற்கும் வியாபாரிகளைக் கண்டறியும் விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...