இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட உடன்படிக்கைக்கு (UNCLOS) அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற ‘ரைசினா கலந்துரையாடல்’ (Raisina Dialogue) மாநாட்டில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் செயற்படும் போது இலங்கை சர்வதேச சட்டக் கட்டமைப்புகளைப் பின்பற்றும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்தார்.
