கட்டார் மன்னருடன் ஜனாதிபதி விசேட தொலைபேசி கலந்துரையாடல்

Date:

வளைகுடா நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலைக்கு மத்தியில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் கட்டார் இராச்சியத்தின் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானியுடன் விசேட தொலைபேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.

நெருக்கடி சூழ்நிலை குறித்து இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். கட்டார் இராச்சியம் முகம்கொடுத்துள்ள சவாலான சூழலில் அந்நாட்டிற்கான ஒத்துழைப்பை ஜனாதிபதி இதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது கட்டார் மன்னரினால் இரு பிரதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டாரிலுள்ள இலங்கை பணியாளர்களின், குடியேற்றவாசிகளின் பாதுகாப்பு, நலன்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு உறுதி வழங்கப்பட்டது.

அத்துடன் தற்போதைய நெருக்கடியான சூழலுக்கு மத்தியிலும் இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை விநியோக்க கட்டார் இராச்சியம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுமெனவும் மன்னர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: Persona Non Grata-வை அறிவித்த கத்தார்

கத்தாரில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய LNG கேஸ் ஆலையின் மீது ஈரான்...

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

வாகன உரிமையாளர்கள் எரிபொருள் QR குறியீடுகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும்...

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமான சேவைகளை இரத்து செய்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் ஒரு சில பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...