நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

Date:

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

குறைந்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காற்றை கொண்ட முதல் இடைப்பருவ காலத்தில் நாடு தற்போது உள்ளது எனவும் இதுவே வெப்பம் அதிகரிக்க காரணம் எனவும் வளிமண்டலவியல் திணைக்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலான நேரமே மிகவும் வெப்பமான நேரம் என்றும், இந்த நேரத்தில் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளுமாறும் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் மக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், வெளிர் நிற ஆடைகளை அணியவும், வெயிலில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னணி இஸ்லாமிய அறிஞர் மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வி காலமானார்

முன்னணி இஸ்லாமிய அறிஞரும், எழுத்தாளரும், கல்வியாளருமான மௌலானா  சையத் சல்மான் ஹுசைனி...

பொசொன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 18,412 தன்சால்கள் பதிவு!

பொசொன் பெளர்ணமி பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட ‘தன்சால்கள்’...

வரலாற்றுச் சிறப்புமிக்க பொசன் பௌர்ணமி தினம் இன்று!

இலங்கையில் பௌத்த தர்மம் உருவாகிய தினத்தை பொசன் பௌர்ணமி தினமாக பௌத்தர்கள்...

பல மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...